அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதிகளில் ஏற்கெனவே தேர்தல் முடிந்து விட்டது. மீதமுள்ள 4 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவை 3 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு 8 மணி நிலவரப்படி, 61.45 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அசாமில் 75.26 சதவீதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.77 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது.
பெண் போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது, சேலம் சைபர் கிரைம் போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 23 இன நாய்களில் இந்த ராட்வீலர் நாய் ரகமும்ஒன்று. நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், இந்ததடைக்கு பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இடைக்கால தடைதற்போது விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கிலும் தேனி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்துக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதன்மூலம் இப்படத்தில் சிம்பு இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
கர்நாடாகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் தனது அலுவல் பணிகளைச் செய்ய முடியாது. அது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இடைக்கால ஜாமீன் குறித்த விசாரணையை மே 9-ம் அல்லது அடுத்த வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் கடல் சீற்றத்தில் சிக்கி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடல் சீற்றத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (மே 7) காலை முதல் இ-பாஸ் அமலுக்கு வந்தது. க்யூஆர் கோடு மூலம் சோதனை செய்த பிறகே சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப். த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர்.
பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர், அனல் அரசு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் முன்னணி ஹீரோ படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
‘ஜோ’ பட வெற்றிக்குப் பிறகு ஆண்களின் பிரச்சினைகளைப் பேசும் கதையில் ஹீரோவாக நடிக்கிறார் ரியோ ராஜ். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை கலையரசன் தங்கவேல் இயக்குகிறார்.
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பணம் கொடுக்காததைக் கண்டித்து நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகியின் வீட்டை பெண்கள் முற்றுகை யிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் பள்ளிகூடத் தெருவில் வசிப்பவர் முருகன்
நில மோசடி புகார் அளித்திருந்த நடிகை கவுதமியிடம் ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவாத்தான் என்ற பகுதியில் 64 ஏக்கர் நிலம்
தமிழக அரசு இந்து கோயில்களை மட்டும் குறி வைத்து சீரழிப்பதாகவும், தமிழக வனத்துறையும். யானை வழித்தட வரைவு அறிக்கை என்ற பெயரில் பக்தர்களை வஞ்சிப்பதாகவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்து காட்டியுள்ளேன்” என 3 ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க 10 போக்குவரத்து சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மோசமான பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங்கால் தோல்வி கண்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி அந்த மாநிலத்தின் 21 மக்களவைத் தொகுதிகள், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.