நடப்பு தோஹா டைமண்ட் லீகில் பங்கேற்க தயாராக உள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை அவர் தக்கவைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதுகுறித்து அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுடன் பகிர்ந்து கொண்டார்.
ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி ஆட்டத்தின் சமநிலையை சீர்குலைத்துள்ளதாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியை களம் காணச் செய்யலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதை அணி நிர்வாகம் செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 57-வது போட்டி அசாத்தியமான, திகைப்பூட்டும் ஷாட்களின் கண்காட்சியாக அமைந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அடைந்த தோல்வி வாழ்நாள் தோல்வியாகும். சஞ்சய் கோயங்காவே கடுப்பாகி கேப்டன் ராகுலிடம் பேச வேண்டிய நிலையைத் தோற்றுவித்தவர்கள் எதிரணி வீரர்கள் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா.
வரும் 18-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் போட்டியில் விளையாட உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டி இந்நிலையில், போட்டி நடைபெறும் நாளன்று மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலிடம் மிகவும் கோபமாக பேசிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையான நிலையில், கே.எல்.ராகுலை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் சஞ்சீவ் கோயங்கா.
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாக தகவல்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (மே 16) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இடையிலான ஆட்டம் மழையின் காரணமாக டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது
அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. முகமது ரிஸ்வான் மற்றும் ஃபக்கர் ஜமான் இணைந்து அபார கூட்டணி அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.
டி20 கிரிக்கெட் பேட்டிங்குக்கு சாதகமான ஒருதலைபட்சமாகச் சென்று கொண்டிருப்பது, விரைவில் களையிழந்து சுவாரஸ்யம் பறிபோய் சோர்வூட்டும் ஒரு வடிவமாக மாறிவிடும் என்று நம்மில் பல கிளாசிக் கிரிக்கெட் ஆர்வலர்கள் உணர்வது போலவே இயன் சாப்பலும் உணர்கிறார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இந்திய அணியில் வரும் நாட்களில் இடம்பிடிக்கும் வீரர் யார் என்ற கேள்வியை கேட்பதுண்டு. அதுவும் காயம் காரணமாக முக்கிய தொடர்களை அவர் மிஸ் செய்யும் நேரங்களில் இந்த டாக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன். இந்நிலையில், நடப்பு சீசனின் சுவாரஸ்ய விஷயங்கள் மற்றும் டி20 உலகக் கோப்பை அணியில் தனக்கான வாய்ப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரில் கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 96 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்த 22 வயதான சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன், நடப்பு சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபார செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பீல்டிங்குக்கு இடையூறு செய்த காரணத்தால் ஆட்டமிழந்தார். மூன்றாவது நடுவரின் பரிசீலனையில் அவர் அவுட் கொடுக்கப்பட்டார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 165 ரன்களைச் சேர்த்துள்ளது.
மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசனாக நடப்பு ஐபிஎல் சீசன் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தான். ஆனால், அதற்கான பதிலை தோனி மட்டுமே அறிவார். இந்த நேரத்தில் கால சக்கரத்தை சற்றே பின்னோக்கி ரீவைண்ட் செய்ய வேண்டி உள்ளது.
பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிலியன் எம்பாப்பே, கிளப் அளவில் தற்போது தான் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த சீசனினுடன் அணியில் இருந்து வெளியேறுகிற தனது முடிவை சமூக வலைதளத்தில் அவர் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் இல்லாமல் களமிறங்குகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.