அரியலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நடந்து வரும் இந்த சமயத்தில் இந்த தேர்தல் சிறப்பாக இருப்பதாகவும் இந்தியா நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பிரபல செய்தி ஊடகம் செய்தி பதிவிட்டதாக ஒரு பதிவு வைரலாகிறது. இது உண்மையா ?
தனக்கு லண்டனில் வேலை கிடைத்ததை தனது நண்பர்களிடம் மகிழ்ச்சியாக போனில் கூறிக் கொண்டிருந்த போது, அரளி பூவை தெரியாமல் வாயில் போட்டு மென்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் பகத் பாசிலின் நடிப்பில் சமீபத்தில் ஆவேசம் படம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூலை கடந்து இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் சினிமா சம்பந்தமாக பகத் பாசில் பேசியுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"இந்தியா முழுவதும் சினிமா இருக்கிறது. ஆனால் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் அதிக திரைக் கவர்ச்சி இருக்கிறது" என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் வெயிலின் தாக்கம் குறையும் அளவிற்கு கடந்த சில நாட்களாக மழை பெய்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? வெப்பநிலை குறையுமா? போன்றவை பொதுமக்கள் மத்தியில் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக தி.நகர் மேம்பாலத்தில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் டிசம்பரில் பணிகள் முடிவடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்த மனுவும் ஒத்திவைத்து கோவை ஜெ.எம் 4 நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில், அமைச்சரை விமர்சித்து தமிழநாட்டு அரசுக்கு சவால் விடுத்து இருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
"சவுக்கு சங்கரிடம் இதற்கு முன்பு கஞ்சா இல்லையா? இப்போதுதான் புதிதாக கஞ்சா வந்துவிட்டதா? இதெல்லாம் ரொம்ப தப்பு. தம்பி சவுக்கு மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கொடுஞ்செயல்" என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபபாளர் சீமான் கூறினார்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை விமர்சித்த நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கு பதிலளித்துள்ளார்.
பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வீடியோக்கள் தொடர்பான வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது பாஜக டார்கெட் செய்துள்ளது. இதுதொடர்பான பெங்களூருவில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சலசலப்பை உண்டாக்கியுள்ளன.
"நீ ஒரு மீசை வெச்ச ஆம்பள தானே.. அப்படியென்றால் ஒரு ஆம்பளை கூட நேரடியாக மோது. ஆம்பள டூ ஆம்பள தான் மோதனும். எதுக்கு இடையில் பெண்களை பற்றி கேவலமாக பேசுற?" என்று சவுக்கு சங்கரை பார்த்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கேள்வியெழுப்பியுள்ளார்.
அண்மையில் மறுவெளியீடு செய்யப்பட்டு சக்கை போடு போட்டு வருகிறது கில்லி. 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இப்படம் வசூலை குவித்து வருவது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கில்லி இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்து கவின் பேசியுள்ளது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று ஜப்பான். இங்கு வணிகம், போக்குவரத்து, தொழில்நுட்பம் என அனைத்து ரீதியிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த ஜப்பான் நாட்டில் இருக்கும் வினோத ரயிலான டாக்டர் எல்லோ ரயில் பற்றி தெரியுமா ??
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் பரபரப்பு வாதம் நடைபெற்றது. இந்நிலையில் ஏதேனும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அன்பே சிவம். இப்படத்தை இயக்கும் வாய்ப்பை முன்னணி இயக்குனர் ஒருவர் மிஸ் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது